Published : 17 Apr 2024 04:06 AM
Last Updated : 17 Apr 2024 04:06 AM

“மத்தியில் ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழித்தால்தான்...” - சீமான் பேச்சு

வந்தவாசியில் ஆரணி மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கு.பாக்கிய லட்சுமியை ஆதரித்து பேசும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

திருவண்ணாமலை: ஆரணி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கு.பாக்கியலட்சுமியை ஆதரித்து, வந்தவாசி பழைய பேருந்து நிலையம் முன்பு, மைக் சின்னத்துக்கு வாக்கு கேட்டு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, ‘‘திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் சாதனை செய்திருந்தால் தனித்து நின்று, தங்கள் சாதனைகளை கூறி வாக்கு கேட்டிருக்கலாமே. காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் பொருளாதார கொள்கையும் ஒன்றே. அது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகும். ‘நீட்’ மற்றும் ஜிஎஸ்டியை கொண்டு வந்தது காங்கிரஸ். உடனிருந்தது திமுக. செயல்படுத்தியது பாஜக. கச்சத்தீவை தாரை வார்த்தது இந்திரா காந்தி. அதை வேடிக்கை பார்த்தது திமுக.

மத்தியில் ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழித்தால் தான், மத்தியில் கூட்டாட்சி மற்றும் மாநிலத்தில் தன்னாட்சி வரும். வாஜ் பாய் ஆட்சியில் தங்க நாற்கர சாலைகள் அமைக்கும் போது திமுகவின் டி.ஆர்.பாலு-தான் சுங்கச்சாவடிகளை கொண்டு வந்தார். இந்தியாவை காப்பாற்றுவோம் என திமுக கூறுகிறது. கர்நாடக காங்கிரஸ் ஆட்சியிடம் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட பெற்றுத் தர முடியாதவர்கள், இந்தியாவை எப்படி காப்பாற்றுவார்கள்.

தண்ணீர் தராத காங்கிரஸூக்கு எதற்கு 10 தொகுதி. கல்வி மாணவர்களின் உரிமை. அதை கொடுப்பது அரசின் கடமை. ஆனால், கல்வி, மின்சாரம், குடிநீர், சாலை, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் தனியாரிடம் கொடுக்கப்பட்டு விட்டு மதுவை மட்டும் அரசே வைத்து நடத்துகிறது. தமிழ் மக்களுக்கு உழைக்கவே நாங்கள் வந்துள்ளோம். எனவே, மைக் சின்னத்துக்கு வாக்களித்து ஆரணி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கு.பாக்கிய லட்சுமியை பெருவாரி யான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x