Published : 13 Apr 2024 05:30 AM
Last Updated : 13 Apr 2024 05:30 AM

சென்னை மாவட்டத்தில் போலீஸார் தபால் வாக்கு செலுத்த இன்று கடைசி நாள்

சென்னை: சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீஸார் தபால் வாக்கு செலுத்த இன்று (ஏப்.13) கடைசி நாளாகும். மக்களவை தேர்தலில் சென்னை மாவட்டத்தில் வட சென்னையில் 35, தென் சென்னையில் 41, மத்திய சென்னையில் 31 என மொத்தம் 107 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 538 போலீஸார், இதர மாவட்டங்களிலிருந்து 14 ஆயிரத்து 533 போலீஸார், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 51 போலீஸார் என மொத்தம் 19 ஆயிரத்து 122 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வட சென்னையில் மூலகொத்தளம், மத்திய சென்னையில் செனாய் நகர், தென் சென்னையில் அடையாறு ஆகிய 3 இடங்களில் இயங்கும் மாநகராட்சி வட்டார துணை ஆணையர் அலுவலகங்களில் போலீஸார் கடந்த 11-ம் தேதி முதல் விறுவிறுப்பாக தபால் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். இந்த தபால் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. அதற்குள் தங்கள் வாக்குகளைச் செலுத்துமாறு மாவட்ட தேர்தல் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x