Published : 06 Apr 2018 09:12 AM
Last Updated : 06 Apr 2018 09:12 AM
எளாவூரில் நடக்கவுள்ள பைபிள் மாநாட்டை ஒட்டி சென்னை சென்ட்ரலில் இருந்து அடுத்த 3 நாட்களுக்கு 2 மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
எளாவூரில் நடக்கவுள்ள பைபிள் மாநாட்டையொட்டி, கும்மிடிப்பூண்டி வரையில் இயக்கப்படும், இரண்டு மின்சார ரயில்கள் வரும் 6, 7, 8-ம் தேதிகளில் எளாவூர் வரை நீட்டித்து இயக்கப்படுகின்றன.
சென்ட்ரலில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் காலை 10.40 மணிக்கு எளாவூர் செல்லும். எளாவூரில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் காலை 10.53 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு வந்து, அதன்பிறகு சென்ட்ரலுக்கு இயக்கப்படும்.
சென்ட்ரல் இருந்து மதியம் 3.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மாலை 5 மணிக்கு எளாவூருக்கு செல்லும். இதேபோல், எளாவூரில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மாலை 5.11 மணிக்கு கும்மிடிப்பூண்டி வந்து, அதன்பிறகு சென்ட்ரலுக்கு இயக்கப்படும்.
இவ்வாறு தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT