Published : 02 Apr 2024 05:35 AM
Last Updated : 02 Apr 2024 05:35 AM

தி.நகர் தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர் 528 பேரை பட்டியலில் சேர்க்க அதிமுக மனு

சென்னை: தி.நகர் தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் 528 பேரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அதிமுக கோரியுள்ளது. தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை சந்தித்த அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது: தேர்தலை முன்னிட்டு தி.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் நிகழ்வு கடந்த டிச.20,21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் 528 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. நீக்கப்பட்டவர்கள் அதேபகுதியில் தான் வசித்து வருகின்றனர்.

அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அல்லது உரிய வாக்குச்சீட்டு, வாக்கு பதிவதற்கான அடையாள அட்டைகள், வைத்திருக்கிற போது அவர்களுக்கு வாக்களிக்கிற தகுதியை வழங்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x