Last Updated : 29 Mar, 2024 07:17 PM

 

Published : 29 Mar 2024 07:17 PM
Last Updated : 29 Mar 2024 07:17 PM

சேலம் - யெஸ்வந்த்பூர் பயணிகள் ரயில் 5 நாட்களுக்கு ரத்து

சேலம்: ரயில்வே பாதை பராமரிப்பு காரணமாக, சேலம் - யெஸ்வந்த்பூர் இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலானது 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

சேலம் - யெஸ்வந்த்பூர் இடையே தருமபுரி, ஓசூர் வழியாக, இரு மார்க்கத்திலும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில்வே யார்டில், பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக, சேலம் ஜங்ஷனில் இருந்து அதிகாலை 5.20 மணிக்குப் புறப்படும் சேலம் - யெஸ்வந்த்பூர் (எண்.16212) பயணிகள் ரயிலானது, வரும் 1-ம் தேதி முதல் வரும் 5-ம் தேதி வரை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், யெஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் மாலை 3.55 மணிக்குப் புறப்பட்டு, சேலம் ஜங்ஷனுக்கு இரவு 9.45 மணிக்கு வந்தடையும், யெஸ்வந்த்பூர் - சேலம் (எண்.16211) பயணிகள் ரயிலானது, வரும் 2-ம் தேதி முதல் வரும் 6-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x