Published : 28 Mar 2024 10:04 AM
Last Updated : 28 Mar 2024 10:04 AM

தமிழகத்தில் யெச்சூரி 3 நாள் பிரச்சாரம்

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தமிழகத்தில் 3 நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வரும் ஏப்.11-ம் தேதி சென்னையிலும், 12-ம் தேதி திண்டுக்கல்லிலும், 13-ம் தேதி மதுரையிலும் பிரச்சாரம் செய்கிறார்.

இதேபோன்று, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் ஏப்.6-ம் தேதி மதுரையிலும், 7-ம் தேதி திண்டுக்கல்லிலும், 8-ம் தேதி திருப்பூர் மற்றும் கோவையிலும் பிரச்சாரம் செய்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x