Published : 24 Mar 2024 06:09 AM
Last Updated : 24 Mar 2024 06:09 AM

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7% இடஒதுக்கீடு கோரி வழக்கு

சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரைச் சேர்ந்தமாற்றுத் திறனாளியான மணி வண்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

7 கோடி மாற்றுத் திறனாளிகள்: நாடு முழுவதும் 7 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் இவர்களுக்கு முறையான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ள போதும், அது முறையாக அமல்படுத்தப்படவில்லை. இதேபோல், தேர்தலிலும் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.

நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி கடந்த ஜனவரியில் மனு அளித்தேன்.

தேர்தல் ஆணையம் மறுப்பு: இவ்வாறு மாற்றுத் திறனாளி களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.

எனவே, நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கும், தேர்தல் ஆணையத் துக்கும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியுள் ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x