Last Updated : 13 Mar, 2024 10:52 AM

 

Published : 13 Mar 2024 10:52 AM
Last Updated : 13 Mar 2024 10:52 AM

“அதிமுக வாக்குகளை பெற எம்ஜிஆர், ஜெ.வை புகழும் மோடி” - ஜெகன் மூர்த்தி நேர்காணல்

அதிமுக கூட்டணியில் சீட் கேட்டிருக்கிறீர்களா? - ஒரு தொகுதியை கேட்டிருக்கிறோம். தந்தால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். தரவில்லை என்றாலும் இணைந்து பணியாற்றுவோம்.அதேநேரம், 2026 தேர்தலில் கூடுதல் சீட்களை தர உறுதி அளிக்க வலியுறுத்துவோம்.

அதிமுக-பாஜக கூட்டணி முறிவுக்கு என்ன காரணம்?இது அதிமுகவுக்கு பலன் தருமா? - பாஜக தலைமையில்தான் கூட்டணி என்று அண்ணாமலை தெரிவித்தார்.மாநிலத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக எப்படி பாஜக தலைமையை ஏற்றுக் கொள்ளும்? மேலும், அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கவில்லை.

எம்ஜிஆர்,ஜெயலலிதாவை மோடி புகழ என்ன காரணம்? - அதிமுகவின் வாக்குகளை பெறவும்,கடைசி நேரத்திலாவது மனம்மாறி கூட்டணிக்குள் அதிமுக வந்துவிடாதா என்ற நம்பிக்கையில் பிரதமர் பேசியுள்ளார்.

போதைப்பொருள் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறாரே பழனிசாமி. இதற்கு தேர்தலில் பலன் கிட்டுமா? - சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணம் போதைப்பொருள்.திமுகவில் இருந்தவரே போதைப்பொருள் கடத்தலில் சிக்கியுள்ளார்.இது திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.அதிமுகவுக்கு சாதகமாக அமையும்.

பாஜகவின்10ஆண்டு ஆட்சி, திமுகவின் 3ஆண்டு ஆட்சி. ஒப்பிடுங்களேன்? - தேசிய அளவில் பாஜக செய்வதை தான்,தமிழகத்தில் திமுக செய்கிறது.ஏழைகளை சுரண்டுவது,ஊழல் இரண்டும்தான் நடக்கிறது.

உங்களுக்கு பிறகுவிசிகவை தொடங்கிய திருமாவளவன் படிப்படியாக உயர்ந்துவிட்டார்.புரட்சி பாரதம் கட்சி வளர்ச்சி அடையாதற்கு என்ன காரணம்? - விசிகவைவிட,ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்காக அதிக அளவில் நாங்கள் பணியாற்றுகிறோம்.

திருமாவளவனிடம் அளவுக்கு அதிகமாக பணம் உள்ளது.ஊடகம் வைத்துள்ளார்.ஊடகங்களும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.எங்களிடம் இவை இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x