Published : 01 Feb 2018 08:55 AM
Last Updated : 01 Feb 2018 08:55 AM
பாஸ்போர்ட் வழங்குவதற்கான காவல்துறை சான்றிதழ் சரிபார்ப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள எம்-பாஸ்போர்ட் செயலி குறித்து நுண்ணறிவுப் பிரிவு காவலர்களுக்கான பயிற்சி வகுப்பை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விஸ்வநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.
பாஸ்போர்ட் வழங்குவதற்காக காவல் துறை சார்பில் சான்றிதழ் மற்றும் முகவரி சரிபார்க்கும் முறையை எளிதாக்கவும், குறித்த நேரத்தில் கடவுச்சீட்டு பொதுமக்களை சென்றடையும் வகையிலும், கடந்த 4-ம் தேதி எம்-பாஸ்போர்ட் என்ற கணிணி வழி கோப்புகள் சமர்ப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
டேப்லெட்கள்
இதன் ஒரு பகுதியாக எம்-பாஸ்போர்ட் செயலி குறித்து நுண்ணறிவுப்பிரிவு காவலர்களுக்கு நேற்று பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விஸ்வநாதன் பங்கேற்று நுண்ணறிவுப்பிரிவு காவலர்களுக்கு மொபைல் டேப்லெட்களை வழங்கினார். டாடா கன்சல்டன்சி நிறுவன தொழில்நுட்ப பிரிவினர் மூலம் இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி பி.கே.அசோக்பாபு, சென்னை பெருநகர தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் எஸ்.என்.சேஷசாயி, வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையாளர் எச்.எம்.ஜெயராம், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் எம்.டி.கணேசமூர்த்தி, நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையாளர்கள் ஆர்.திருநாவுக்கரசு, எஸ்.விமலா மற்றும் சென்னை பெருநகர காவல் துணை ஆணையாளர்கள், நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT