Published : 29 Jan 2014 07:45 PM
Last Updated : 29 Jan 2014 07:45 PM

ஜெயலலிதா பிரதமர் ஆவது உறுதி: சரத்குமார் நம்பிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆவது உறுதி என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "சமத்துவ மக்கள் கட்சியின் 2-வது மாநில மாநாடு, நெல்லையில் பிப். 16-ம் தேதி நடக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதிமுக வெற்றிக்காக தீவிரப் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். அதிமுக கூட்டணியில் எங்கள் கட்சிக்கு சீட் கேட்பது குறித்த எண்ணம் இப்போது இல்லை. முதல்வர் என்ன நினைக்கிறாரோ, அதற்கேற்ப நாங்கள் செயல்படுவோம்.

முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆவது உறுதி. நரேந்திர மோடி பிரதமராக ஆதரவு கிடைக்காது. மத்தியில் எந்தக் கட்சியாலும் தனியாக ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகும்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராவார்" என்றார்.

திமுக தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போது, "மு.க.அழகிரியை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கியது அவர்களது உள்கட்சி பிரச்சினை. இதை தந்தை, மகனுக்கு இடையே நடந்த பிரச்சினையாகவே கருதுகிறேன். அழகிரி நீக்கத்தால் திமுகவில் எந்த மாற்றமும் நடந்துவிடாது. திமுக சக்தி இழந்த கட்சியாகத்தான் காணப்படுகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x