Published : 18 Feb 2024 12:58 PM
Last Updated : 18 Feb 2024 12:58 PM

“பேரவையில் இருக்கையை மாற்றியதால் வருத்தம் இல்லை” - ஓபிஎஸ்

மதுரை: சட்டப்பேரவையில் இருக்கையை மாற்றியதால் வருத்தம் ஏதும் இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகேதாட்டுவில் கர்நாடகா அரசால் அணை கட்ட முடியாது. தமிழக மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கச்சத் தீவை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.

சட்டப்பேரவையில் இருக்கையை அவர்களாகவே கொடுத்தார்கள், தற்போது அவர்களாகவே எடுத்துக் கொண்டார்கள். இதில் எந்த வருத்தமும் இல்லை. பாஜக கூட்டணி தொடர்பாக அக்கட்சியின் தேசிய தலை வர்களை சந்திக்க சென்றால் உங்களிடம் ( செய்தியாளர்களிடம் ) சொல்லி விட்டுத்தான் செல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x