Published : 09 Feb 2024 04:55 AM
Last Updated : 09 Feb 2024 04:55 AM

செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறை சோதனை

கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு

கரூர்: கரூர் அருகே ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை மேற்கொண்டனர்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ளசெந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரி உள்ளிட்ட20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர்பல முறை சோதனை நடத்தினர்.

கரூர் அடுத்த ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜிவீட்டிலும் கடந்த ஜூன் 13-ம் தேதிஅமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கிடையே, புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின்நீதிமன்ற காவல் 19-வது முறையாக வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு 5 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை 7.30 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.

தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமாருக்கு எதிராக ஏற்கெனவே லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார். அவர்தற்போது எங்கு இருக்கிறார், கரூர் வந்தாரா என்று அவரதுபெற்றோரிடம் விசாரித்ததுடன், வீட்டில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் அமலாக்கத் துறையினர் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனை பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.

தகவல் அறிந்து செந்தில் பாலாஜி வீடு முன்பு திமுகவினர், வழக்கறிஞர்கள், திரண்டனர். சோதனையின்போது துணைராணுவமோ, போலீஸாரோபாதுகாப்புக்கு வரவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x