Published : 31 Jan 2024 05:48 AM
Last Updated : 31 Jan 2024 05:48 AM

மநீம.வுக்கு டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை: தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

சென்னையில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேலு, பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம்.

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மக்களவைத் தேர்தல் பணிக்கான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்றிரவு வெளிநாடு சென்றதால் முன்னதாக சென்னையில் கட்சித் தலைமையகத்தில் துணைத் தலைவர்கள்மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோருடன் நேற்றுஆலோசனை மேற்கொண்டார். பின்னர் மக்களவைத்தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு குழுவையும் அவர் அமைத்தார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் நேற்று விடுத்த அறிக்கை: மக்களவைத் தேர்தலை சிறப்பான முறையில் எதிர்கொண்டு பெருவெற்றியை ஈட்டுவதற்காக மக்கள்நீதி மய்யத்தின் மூத்த நிர்வாகிகளை உள்ளடக்கிய தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், கட்சியின் துணைத் தலைவர்கள்ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு, பொதுச்செயலாளர்ஆ.அருணாச்சலம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனது நேரடி மேற்பார்வையில் செயல்படும் குழுவுக்கு மக்களவைத் தேர்தல்தொடர்பான செயல்திட்டங்களை உருவாக்குவதற்கும், செயல்படுத்துவதற்கும் பிற குழுக்களை அமைப்பதற்கும் வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்குகட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக மக்களவைத் தேர்தலில் கட்சிகள் தங்களுக்கான சின்னத்தைக் கேட்டு விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில்,டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கித் தரும்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைமையகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x