Published : 24 Jan 2024 05:06 AM
Last Updated : 24 Jan 2024 05:06 AM

பத்திரப்பதிவு எண்ணிக்கை அதிகரிப்பு - பதிவுத்துறை செயலர் தகவல்

சென்னை: பொங்கலுக்குப்பின் ஜன.31 வரை அனைத்து வேலை நாட்களிலும் பத்திரப் பதிவுக்கான டோக்கன்களை கூடுதலாக வழங்க உத்தரவிடப்பட்ட நிலையில், ஆவணப்பதிவுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜன.31-ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது.

குறிப்பாக, நேற்று முன்தினம் (ஜன.22) மட்டும் 21,004 பத்திரங்கள் பதியப்பட்டு அதன் மூலம் அரசுக்கு ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. புதிய கூட்டு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் ஜன.22-ம் தேதி சென்னையில் பதியப்பட்ட 137 அடுக்குமாடி குடியிருப்பு பதிவுகளும் அதன்மூலம் பெறப்பட்ட ரூ.12 கோடி வருவாயும் இதில் அடங்கும். இனி வரும் நாட்களிலும் பதிவுகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x