Published : 05 Jan 2024 05:25 AM
Last Updated : 05 Jan 2024 05:25 AM

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஜன. 8, 9-ல் ஆலோசனை

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

சென்னை: மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள், சென்னையில் வரும் ஜன. 8, 9-ம்தேதிகளில், தேர்தல் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலை வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை இந்தியதேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்காக அவ்வப்போது மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் காணொலி வாயிலாகவும், நேரடியாக அந்த மாநிலங்களுக்கு சென்றும் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் வரும் ஜன. 8, 9 ஆகிய இரு தினங்களும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். இதில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாநில சட்டம் - ஒழுங்கு, வாக்குச்சாவடிகள் நிலை போன்றவை குறித்தும் இதில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x