Published : 20 Jan 2018 10:01 AM
Last Updated : 20 Jan 2018 10:01 AM
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு தரைவழி தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமைகளில் தரைவழி தொலைபேசியில் இருந்து அளவில்லா எண்ணற்ற இலவச அழைப்புகளை (அன்லிமிடெட் ப்ரீ வாய்ஸ் கால்) மேற்கொள்ளும் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் இச்சேவையை ரத்து செய்ய உள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
12 மில்லியன் இணைப்புகள்
இந்த அறிவிப்பு ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும், புதிய வாடிக்கையாளர்களுக்கும், பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 12 மில்லியன் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
ஏற்கனவே, இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை தரைவழி தொலைபேசி இணைப்பு மூலம் இலவச அழைப்புகளை மேற்கொள்ளும் சேவையை இரவு 10.30 மணி முதல் காலை 6 வரை என பிஎஸ்என்எல் நிறுவனம் குறைத்து அறிவித்தது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், தரைவழி தொலைபேசி மூலம் அளவில்லா எண்ணற்ற இலவச அழைப்புகளை மேற்கொள்ளும் சேவை யை வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் ரத்து செய்ய உள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT