Published : 13 Dec 2023 05:31 AM
Last Updated : 13 Dec 2023 05:31 AM

ஐயப்ப பக்தர் மீது தாக்குதல்: இந்து அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்ரீரங்கம் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து அமைப்பினர்.

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணி கோட்டத் தலைவர் போஜராஜன் தலைமை வகித்தார். விஹெச்பி மாநில அமைப்பாளர் சேதுராமன், பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், `பக்தர்களைத் தாக்கிய கோயில் பாதுகாவலர்களை கைது செய்ய வேண்டும். கோயில்களில் இருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும்' என்று முழக்கமிட்டனர்.

ரங்கம் கோயில் `ரங்கா ரங்கா' கோபுரம், ராஜகோபுரம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர், பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x