Published : 30 Jan 2018 08:35 AM
Last Updated : 30 Jan 2018 08:35 AM
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்படவிருந்த 12 கிலோ எடையுள்ள தங்கத்தை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்நாட்டைச் சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா தீவுகள் மற்றும் ராமேசுவரம் தீவு, மணல் தீடைகள் உள்ளன. இங்கிருந்து, கடல் மார்க்கமாக இலங்கை செல்ல மிகக்குறைவான தூரமே உள்ளது. இதனால், இலங்கையில் இருந்து இந்த வழியாக கடத்தல் பொருள்கள் கொண்டுவர அதிக வாய்ப்புள்ளதால் எல்லைப் பகுதிகளில் இந்திய, இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலைமன்னார் அருகே தங்கம் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை தலைமன்னார் பகுதியில் உள்ள உறுமலை கடற்பரப்பில் ரோந்து சென்றபோது, அவ்வழியே சென்ற பைபர் படகை சோதனையிட்டனர். அதில் 12 கிலோ எடையுள்ள 120 தங்கக் கட்டிகள் இருந்தன.
தங்கக் கட்டிகளையும், படகையும் பறிமுதல் செய்த கடற்படையினர் படகிலிருந்த அந்நாட்டை சேர்ந்த 2 இளைஞர்களையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் மீனவர்கள் என தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள், யாழ்ப்பாணம் சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT