Published : 29 Jan 2018 09:54 AM
Last Updated : 29 Jan 2018 09:54 AM
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக எம்பிக்கள் அனைவரும் காவிரி, மீனவர் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து உரிய தீர்வு காண வேண்டும் என்று தமாகா தலை வர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி யுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாத முக்கிய பிரச்சினை களுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். குறிப்பாக, காவிரி நீர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, விவசாயிகள் கடன் பிரச்சினை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் போன்றவை குறித்து விவாதம் நடத்தி தீர்வு காண வேண்டும்.
மேலும், மக்களுக்கு சிறந்த பயன்களை அளிக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் நிறைந்த பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த கூட்டத் தொடரில் காவிரி மற்றும் தமிழக மீனவர் பிரச்சினைகளுக்கு தமிழக எம்.பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்து உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT