Published : 29 Jan 2018 09:55 AM
Last Updated : 29 Jan 2018 09:55 AM
ரஜினி ரசிகர் மன்றத்துக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், உறுப்பினர்களாக இணையும் நபர்களிடம் வாக்காளர் அடையாள அட்டையின் நகலும் பெறப்பட்டு வருகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை அறிவிப்பை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருப்போரூர் ஒன்றியம் மற்றும் காஞ்சிபுரம் நகரப் பகுதிகளில் ரசிகர் மன்றத்துக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பணிகளில் கடந்த பல ஆண்டுகளாக ரசிகர் மன்ற நிர்வாகத்தின் உத்தரவுக்கும் கட்டுப்பட்டு பணிபுரிந்துவரும் நபர்களை தேர்வு செய்து, பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், வட்டார அளவிலான பொறுப்புகளை பெறுவதற்காக மன்ற நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், காஞ்சிபுரம் நகரப் பகுதியில் இரு பிரிவுகள் உருவாகும் நிலையும் உள்ளது. எனினும், ரசிகர் மன்றத்தின் தலைமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லாததால் எவ்வித பிரச்சினையும் இன்றி மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
உறுப்பினர் சேர்க்கும் பணிகள் தொடங்கியுள்ளதால், நகரப் பகுதியில் உள்ள இளைஞர்கள், குடும்ப பெண்கள் ஆர்வமாக மன்றத்தில் இணைந்து வருகின்றனர். விரைவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெளியிடப்படும் என்று ரசிகர் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT