Published : 21 Jan 2018 11:15 AM
Last Updated : 21 Jan 2018 11:15 AM
அதிமுக அம்மா கட்சி என்ற பெயரைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்காவிட்டால், தனிக்கட்சி தொடங்குவோம் என்று டிடிவி.தினகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் டிடிவி.தினகரன் அளித்த பேட்டி:
அதிமுக அம்மா கட்சி என்ற பெயர் கிடைத்தால் சசிகலா பொதுச் செயலாளராகவும், நான் துணைப் பொதுச் செயலாளராகவும் தொடர முடியும். இக்கட்சியில் உள்ளவர்களும் அப்படியே தொடர முடியும். இல்லாவிட்டால், இவர்கள் அதிமுகவினராகத்தான் இருப்பார்கள். தற் போது நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம்.
ஒருவேளை அதிமுக அம்மா கட்சி என்ற பெயரில் இயக்கத்தை தொடர்ந்து நடத்த முடியாவிட்டால், புதிய கட்சி தொடங்க வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் ஆளாவோம். ஏனென் றால் கட்சி இல்லாமல் தேர்தலைச் சந்திக்க முடியாது. கட்சி இல்லாமல் செயல்படுவதில் நடைமுறைச் சிக்கல் இருக்கிறது.
ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமென்றாலும் அதற்கு கட்சியின் பெயரைக் குறிப்பிட வேண்டியுள்ளது. நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு எங்களுக்கு கிடைக்கும். அதிமுக அம்மா கட்சி என்ற பெயரை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, புதிய கட்சி தொடங்குவதுதான் ஒரே வழி என்றால் அதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT