Published : 29 Nov 2023 04:51 AM
Last Updated : 29 Nov 2023 04:51 AM

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

சென்னை: மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது எனக்கூறி உச்ச நீதிமன்ற நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதி எஸ்.கே.கவுல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடவும், இந்த வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கவும் முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். எய்ம்ஸ் விவகாரத்தை மனுதாரர் நிர்வாக ரீதியில்தான் அணுக வேண்டும் எனக்கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x