Published : 27 Jan 2018 09:40 AM
Last Updated : 27 Jan 2018 09:40 AM

மாணவர்கள் பிடித்த துறையை தேர்வு செய்ய வேண்டும்: நியூ பிரின்ஸ் அறிவியல், கலைக் கண்காட்சியில் மைத்ரேயன் கருத்து

சென்னையை அடுத்த உள்ளகரம், ஆதம்பாக்கம் பகுதிகளில் உள்ள நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் சார்பில் அறிவியல், கலை மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

இதனை மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறும்போது, “மாணவர்கள் படிப்பை தாண்டி தங்களுக்கு பிடித்த கலை திறமையை வளர்த்துக்கொண்டால் வாழ்வில் எளிதில் வெற்றி பெறலாம். பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து ஊக்கமும், சிறப்பு பயிற்சியும் அளிக்க வேண்டும்.

வாழ்வில் வெற்றி

மாணவர்கள் தங்களுக்கு எந்த துறையில் ஆர்வமும், ஈடுபாடும் உள்ளதோ அந்த துறையை தேர்ந்தெடுத்து படித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவர இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகள் உதவும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை முன்னாள் மாநில தகவல் ஆணையர் ஜி.இராமகிருஷ்ணன், ஆலந்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ வி.என்.பி. வெங்கடராமன், நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குநர் எம்.பிரபாகரன், முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர்.நரேஷ்குமார், நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலாளர் மகாலட்சுமி, துணைத் தலைவர் நவீன் பிரசாத், தாளாளர் கே.லோகநாதன், நிர்வாக அதிகாரி கே.பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x