Published : 19 Jan 2018 10:17 AM
Last Updated : 19 Jan 2018 10:17 AM

தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறிய தாவது:

தற்போது வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலையோ, காற்றழுத்த தாழ்வு பகுதியோ இல்லை. குளிர்கால மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை. அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.

வியாழக்கிழமையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் எங்கும் குறிப்பிடும்படியாக மழை பதிவாகவில்லை. அதே நேரத்தில் அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் உள் பகுதியில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு இருக்கும்.

சென்னையில் பொதுவாக வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x