Last Updated : 13 Nov, 2023 04:34 PM

 

Published : 13 Nov 2023 04:34 PM
Last Updated : 13 Nov 2023 04:34 PM

மதுரையில் நேரக் கட்டுப்பாடு மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 205 வழக்குகள் பதிவு

படம்: ஜி.மூர்த்தி

சென்னை: மதுரையில் நேரக் கட்டுபாடு மீறி பட்டாசு வெடித்த நபர்கள் மீது 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல் துறையினர் தெரிவித்தனர். பொதுவாக தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையின்போது, விபத்து மற்றும் சுற்றுச்சூழல் மாசு தடுத்தல், பட்டாசு வெடிக்க, காலை 6 முதல் 7 மணி, மாலை 7 முதல் 8 மணி என, நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினரும் எச்சரிக்கைவிடுத்து இருந்தனர்.

இந்நிலையில், மதுரை மாநகரில் கடந்த 11-ம் தேதி தீபாவளிக்கு முந்தைய நாள் நேரக் கட்டுபாடு மீறி பட்டாசு வெடித்ததாக 6 வழக்கு பதிவு செய்யப்பட்டன. இது போன்ற தீபாவளி தினத்தன்று 141 வழக்குகளும் என மொத்தம் 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அரசு விதிமுறையை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டது. மாநகரம் நீங்கலாக மாவட்டத்தின் இதர பகுதிகளில், நேரக் கட்டுபாட்டை மீறி பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 58 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன என காவல் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x