Published : 23 Jan 2018 10:04 AM
Last Updated : 23 Jan 2018 10:04 AM
முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் உள்ளிட்ட திருவண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள் 278 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி. தினகரன் வெற்றி பெற்று எம்எல்ஏவானார். இதனைத் தொடர்ந்து, தினகரன் ஆதரவாளர்களை கட்சியைவிட்டு நீக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோருக்கு அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
இதன்படி, தினகரன் ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று, ராமநாதபுரம் மாவட்டம் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், அவரது மகன், வ.து.ந.ஆனந்த், முன்னாள் மாவட்ட செயலாளர் மண்டபம் ஜி.முனியசாமி உள்ளிட்ட 127 பேரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.ஆர்.தர்மலிங்கம் உட்பட 151 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் கட்சியினர் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT