Published : 13 Jan 2018 09:52 AM
Last Updated : 13 Jan 2018 09:52 AM
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
5 நாட்கள் நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு முடிவடைந்தது. அதிமுகவில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பின் நடக்கும் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இதுவாகும்.
எனவே, சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் நேற்று மாலை 3.45 மணிக்கு முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ. செங்காட்டையன், செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதலில் மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, முன் னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT