Published : 20 Jan 2018 10:23 AM
Last Updated : 20 Jan 2018 10:23 AM

பராமரிப்பு பணி காரணமாக திருவள்ளூர், அரக்கோணம் மார்க்கத்தில் 16 மின் ரயில்கள் ரத்து

பட்டாபிராம் வெஸ்ட் சைடிங் – திருநின்றவூர் இடையே பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் இன்றும், நாளையும் மின்சார ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 16 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

20-ம் தேதியில் மாற்றம்

மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து திருவள்ளூருக்கு காலை 9.15, 9.30, 11.30, வேளச்சேரியில் இருந்து திருவள்ளூருக்கு காலை 9.05, திருவள்ளூரில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 10.50, 11.25, மதியம் 1.05 மணி மற்றும் திருவள்ளூரில் இருந்து வேளச்சேரிக்கு காலை 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 9.10, 11.05, மதியம் 12.50, திருவள்ளூருக்கு காலை 9.45, திருத்தணிக்கு காலை 10, 11.45, கடம்பத்தூருக்கு காலை 10.30, மதியம் 12 மணி, வேளச்சேரியில் இருந்து திருத்தணிக்கு காலை 11.20, திருவள்ளூருக்கு மதியம் 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் விரைவு பாதையில் இயக்குவதால், பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூர், வேப்பம்பட்டு மற்றும் செவ்வாப்பேட்டை ரோடு ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும்.

இதேபோல், திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் மற்றும் கடம்பத்தூரில் இருந்து சென்னைக்கு வரும் மின்சார ரயில்களில் 8 மின்சார ரயில்கள், புட்லூர், திருநின்றவூர், நெமிலிச்சேரி மற்றும் பட்டாபிராம் ரயில் நிலையங்களில் நிற்காமல் வரும்.

21-ம் தேதியில் மாற்றம்

மூர்மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூருக்கு காலை 9.15, 9.30, 11.30, சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூருக்கு காலை 9.50, திருவள்ளூரில் இருந்து மூர்மார்கெட் வளாகத்துக்கு காலை 10.50, 11.25, மதியம் 1.05 திருவள்ளூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 9.10, 11.05, மதியம் 12.50, திருவள்ளூருக்கு காலை 9.45, திருத்தணிக்கு காலை 10, 11.45, கடம்பத்தூருக்கு காலை 10.30, மதியம் 12 சென்னை கடற்கரையில் இருந்து திருத்தணிக்கு மதியம் 12.10 மணி, திருவள்ளூருக்கு மதியம் 1.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் விரைவு பாதையில் இயக்கப்படுவதால் பட்டபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூர், வேப்பம்பட்டு மற்றும் செவ்வாபேட்டை ரோடு மின்சார ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும்.

இதேபோல், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் இருந்து சென்னைக்கு வரும் மின்சார ரயில்களில் 8 மின்சார ரயில்கள் புட்லூர், திருநின்றவூர், நெமிலிச்சேரி மற்றும் பட்டாபிராம் ரயில் நிலையங்களில் நிற்காமல் வரும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x