Published : 26 Oct 2023 05:57 AM
Last Updated : 26 Oct 2023 05:57 AM

ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம்

கோப்புப்படம்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில், எக்ஸ் வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: இன்று (அக்.25) பிற்பகல் கிண்டியில் உள்ள ராஜ்பவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய மர்ம நபர்கள் பிரதான வாயில் வழியாக ஆளுநர் மாளிகைக்கு உள்ளே நுழைய முயன்றனர்.

ஆனால் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், ராஜ்பவனில் 2 பெட்ரோல் குண்டுகளைவீசி தாக்குதல் நடத்திவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இவ்வாறுஅந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x