Published : 20 Oct 2023 05:28 AM
Last Updated : 20 Oct 2023 05:28 AM

ஆளுநர் ரவி டெல்லி பயணம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு நாள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்கள், நீண்ட காலமாக சிறையில் உள்ள கைதிகளின் முன்விடுதலை ஆகியவை தொடர்பான கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு காத்திருக்கின்றன. இதில், கைதிகளின் முன்விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு கடிதம் எழுதிய சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, கோப்புகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறும் கோரியிருந்தார். இதுதவிர, சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் 10-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இந்த சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். திமுகவினர் குறித்து ஆளுநரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அளித்துள்ள புகார்கள் தொடர்பாக சட்ட ஆலோசனை பெறவும், உள்துறை அதிகாரிகளை சந்திக்கவும் அவர் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை அவர் சென்னை திரும்புவார் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x