Published : 12 Oct 2023 05:19 AM
Last Updated : 12 Oct 2023 05:19 AM

தமிழகம் முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

கோப்புப்படம்

சென்னை: தமிழகம் முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த லஷ்மிபதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகளையும் இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று உத்தரவிட்டார்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு டிஜிபியாக இருந்த கே.வன்னிய பெருமாள் ஊர்க்காவல் படை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக இருந்த ஐ.ஜி. பி.கே.செந்தில் குமாரி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார். அங்கிருந்த மகேஷ்வரி திருநெல்வேலி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி திஷா மித்தல் தொழில்நுட்ப சேவைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருவாரூர், தென்காசி, நீலகிரி, கரூர், குமரி எஸ்.பி.க்களும் மாற்றப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 16 போலீஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் பி.அமுதா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x