Published : 10 Oct 2023 05:10 AM
Last Updated : 10 Oct 2023 05:10 AM

உம்மன் சாண்டி, எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு இரங்கல்

சென்னை: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்டோர் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று, காலை 10 மணிக்குசட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் இ.ஏ.லியாவுதீன் சேட் (அரவக்குறிச்சி), கே.பழனியம்மாள் (ராசிபுரம்), வெ.அ.ஆண்டமுத்து (பவானிசாகர்) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார். அதன்பின், அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

மவுன அஞ்சலி: தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் தனது 95-வது வயதில் மறைந்த, பஞ்சாப் மாநிலத்தின் 5 முறை முதல்வராக பணியாற்றிய பிரகாஷ் சிங் பாதல், தமிழக அரசின் முன்னாள் தலைமைச்செயலர் ப.சபாநாயகம், கேரளாவில் 2 முறை முதல்வராகவும், 12 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்த உம்மன் சாண்டி, வேளாண் அறிவியலாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை பேரவைத் தலைவர் வாசித்தார்.

இந்த இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x