Published : 17 Dec 2017 12:30 PM
Last Updated : 17 Dec 2017 12:30 PM

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் குறைதீர் கூட்டம்: 687 பேர் மனுக்கள் அளித்தனர்

ரயில்வேயில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட குறைதீர் கூட்டத்தில் 687 பேர், தங்களது குறைகளை தீர்க்க கோரி மனுக்களை அளித்துள்ளனர்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரயில்வேயில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்காக ஆண்டுதோறும் ஒரு முறை குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குறைதீர் கூட்டம் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், 687 பேர் பங்கேற்று, தங்களது புகார் மனுக்களை அளித்தனர். ஓய்வூதியம், ஓய்வு கால பணப்பலன்கள் உள்ளிட்டவை குறித்து அதிகளவில் புகார்கள் இடம்பெற்று இருந்தன. இதில், 224 புகார்கள் புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x