Published : 23 Dec 2017 04:41 PM
Last Updated : 23 Dec 2017 04:41 PM

விழுப்புரம் மருதூர் ஏரி ஆக்கிரமிப்பு; தாமாக முன் வந்து உயர் நீதிமன்றம் வழக்குப் பதிவு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

 விழுப்புரம் மருதூர் ஏரி ஆக்கிரமிப்பு சம்பந்தமாக அளிக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்களை அடுத்து தானாக முன்வந்து வழக்கை ஏற்ற உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் வி.மருதூர், கண்டியமடை, வளவனூர் உள்ளிட்ட ஆறு கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்கள் பாசனத்திற்கான ஆதாரமாக இருக்கும் 100 ஏக்கர் பரப்பில் வி.மருதூர் ஏரி உள்ளது. இந்த ஏரி முறையாக தூர்வாரப்படாமல் முட்புதர்கள் சூழ்ந்தும், பலர் ஆக்கிரமித்தும் இருப்பதால், ஆக்கிரமிப்பை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்கக் கோரி விழுப்புரத்தை சேர்ந்த பசுமை உலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புகைப்பட ஆதாரங்களுடன், கடிதம் எழுதபட்டது.

இந்தக் கடிதத்தை தானாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றது உயர் நீதிமன்றம். இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது விழுப்புரம் மருதூர் ஏரி தொடர்பான வழக்குகளை அனைத்தும் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்படும் என்றும். கீழமை நீதிமன்றங்கள் எதுவும் மருதூர் ஏரி தொடர்பான வழக்கை விசாரிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள் அமர்வு, தமிழக அரசும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x