Last Updated : 03 Oct, 2023 03:43 AM

 

Published : 03 Oct 2023 03:43 AM
Last Updated : 03 Oct 2023 03:43 AM

12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் வனக்காப்பாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது?

திண்டுக்கல்: தமிழக வனத்துறையில் 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் வன காப்பாளர்களுக்கு, வனவராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக வனத்துறையில் வனவர், வனச்சரகர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். வனப்பகுதியில் விலங்குகளை கண்காணிப்து, மரம் விழுந்தால் சீரமைப்பது, மீட்பு பணி உட்பட அனைத்து பணிகளையும் வனக்காப்பாளர்கள் மேற்கொள்கின்றனர். இவர்கள் 8 ஆண்டுகள் வனக்காப்பாளர்களாக தங்கள் பணியை நிறைவு செய்ததும், வனவராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

சுமார் 300-க்கும் மேற்பட்ட வனக்காப்பாளர்கள், பதவி உயர்வுக்காக காத்திருந்த போது கடந்த 2022-ல் 150 வனக்காப்பாளர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவில்லை. அதில் பெரும்பாலானோர் 50 வயதை கடந்தவர்கள். சிலர் ஓய்வு பெறும் வயதை எட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பணிக்காலத்தில் கிடைக்கும் ஒரே ஒரு பதவி உயர்வும் தற்போது கிடைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த வனக்காப்பாளர்களுக்கு, வனவர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பதவி உயர்வு எதிர்பார்ப்பு: இது குறித்து வனக்காப்பாளர்கள் கூறியதாவது: வனத்துறை விதிகளின் படி, 8 ஆண்டுகள் வனக்காப்பாளர்களாக பணி மற்றும் வனவியல் கல்லூரியில் 6 மாதம் பயிற்சி முடித்ததும், குற்றத்தாள்கள் ஏதும் இல்லாதபட்சத்தில் வனவராக பதவி உயர்வு வழங்கலாம். கடந்த 2020, 2021-ல் கரோனா காலத்தில் வனக்காப்பாளர்களுக்கு, வனவராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. 2022-ல் பாதி பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு மேலாக வனக்காப்பாளராக பணியாற்றியவர்களுக்கு உடனே வனவராக பதவி உயர்வு வழங்க வேண்டும். வனப்பணியாளர்களுக்கு அளிக்க வேண்டிய பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புவதன் மூலமாக தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த முடியும் என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x