Published : 30 Sep 2023 05:44 AM
Last Updated : 30 Sep 2023 05:44 AM

கன்னியாகுமரியில் படகு கவிழ்ந்து 3 மீனவர் கடலில் மூழ்கினர்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த ஆரோக்கியம் என்பவரது விசைப்படகில் கடந்த 25-ம் தேதி குளச்சல் துறைமுகத்தில் இருந்து 16 பேர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு அவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். உவரி பகுதியில் படகு வந்தபோது, திடீரென சூறைக்காற்று வீசியதால் படகு கவிழ்ந்தது. படகில் இருந்த ஆரோக்கியம் உள்ளிட்ட 16 பேரும் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர். அந்த வழியாக மற்றொரு படகில் வந்த மீனவர்கள் இதைப் பார்த்து, தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆரோக்கியம் உள்ளிட்ட 13 பேரையும் மீட்டனர். எனினும், ஆன்றோ, பையாஸ், மற்றொரு ஆரோக்கியம் ஆகிய 3 மீனவர்களும் கடலில் மூழ்கி மாயமாகினர். கடலோரக் காவல் படையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x