Published : 29 Sep 2023 05:20 AM
Last Updated : 29 Sep 2023 05:20 AM

நன்னடத்தை விதிகள்படி கைதிகள் விடுதலை: அமைச்சர் விளக்கம்

புதுக்கோட்டை: சிறைக் கைதிகளில் மிகப்பெரிய சதி செயல்களில் ஈடுபட்டவர்கள் தவிர, மற்றவர்கள் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்து அந்த மாநிலத்தில் போராட்டம் நடத்துகிறார்கள். எனினும், நம்முடைய கோரிக்கை வெற்றி அடைந்துள்ளது.

சிறையில் தண்டனைக் கைதிகளாக உள்ளோரில் 4, 5 கொலை செய்தவர்கள், மிகப் பெரிய சதிச் செயல்களில் ஈடுபட்டவர்கள் போன்றவர்களை தவிர, மற்றவர்களில் தகுதியானவர்கள் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவர் என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x