Published : 07 Dec 2017 04:57 PM
Last Updated : 07 Dec 2017 04:57 PM
பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாமக தொண்டர்கள் தர்மபுரி தேர்தல் அதிகாரி குணசேகரனை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவரை தகாத வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தர்மபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் மீது கொலை மிரட்டல், அனுமதியின்றி கூட்டத்தை திரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தர்மபுரி டவுன் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி அன்புமணி ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தன் மீதான புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்திருந்தார்..
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், அன்புமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT