Published : 30 Dec 2017 10:18 AM
Last Updated : 30 Dec 2017 10:18 AM

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒக்கி புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளான கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புக்காக தமிழகத்துக்கு ரூ.9,302 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. அந்த கோரிக்கையை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

இந்நிலையில், ஒக்கி புயல் தாக்கிய பகுதிகளை ஆய்வு செய்வதற்காக காலம் கடந்த நிலையில் மத்திய குழு தற்போது தமிழகம் வந்துள்ளது. அந்த குழுவினர் புயல் மற்றும் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழுமையான ஆய்வு நடத்த வேண்டும். மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள், அரசு அதிகாரிகளின் கருத்தை முறையாகக் கேட்டறிந்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

மத்திய அரசு, கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவித்து, தமிழகத்துக்கு தேவையான நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசும் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து கூடுதல் நிதி பெற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை விரைந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x