Published : 20 Dec 2017 10:33 AM
Last Updated : 20 Dec 2017 10:33 AM

மீனவர்களை விரைந்து மீட்க வலியுறுத்தல்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர். சரத்குமார் நேற்று விடுத்துள்ள அறிக்கை:

அண்மையில் தாக்கிய ஒக்கி புயலால் காணாமல்போன 551 மீனவர்கள் குறித்தும், அவர்களை மீட்பது குறித்தும், வரும் 22-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் வரவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை மனநிறைவோடு கொண்டாடும் வகையில், காணாமல் போன மீனவர்கள் அனைவரும் அதற்குள்ளாக மீட்கப்பட வேண்டும். உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் எனத் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x