Published : 14 Dec 2017 10:34 AM
Last Updated : 14 Dec 2017 10:34 AM
தமிழக ஆளுநர் இன்று (14-ம் தேதி) கடலூர் மாவட்டத்துக்கு செல்கிறார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து ரயில் மூலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருகிறார். விருத்தாசலத்தில் அரிமா சங்கம் சார்பில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார்.
அதன் பிறகு கார் மூலம் கடலூருக்கு சென்று தங்குகிறார். நாளை (15-ம் தேதி) கடலூரில் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. ஆளுநர் வருகையையொட்டி அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT