Published : 14 Dec 2017 10:34 AM
Last Updated : 14 Dec 2017 10:34 AM

ஆளுநர் இன்று கடலூர் வருகை

தமிழக ஆளுநர் இன்று (14-ம் தேதி) கடலூர் மாவட்டத்துக்கு செல்கிறார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து ரயில் மூலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருகிறார். விருத்தாசலத்தில் அரிமா சங்கம் சார்பில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார்.

அதன் பிறகு கார் மூலம் கடலூருக்கு சென்று தங்குகிறார். நாளை (15-ம் தேதி) கடலூரில் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. ஆளுநர் வருகையையொட்டி அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x