Published : 31 Dec 2017 04:08 PM
Last Updated : 31 Dec 2017 04:08 PM
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கு நன்றி என்று ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்று ரஜினி இன்று அறிவித்தார்.
ரஜினியின் இந்த அரசியல் பிரவேசத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். ரஜினியின் அரசியல் வருகையை புத்தாண்டுப் பரிசாகக் கருதி ரசிகர்கள் கொண்டாடியும் வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினி தன் ட்விட்டர் பக்கத்தில், ''என்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT