Published : 10 Dec 2017 11:10 AM
Last Updated : 10 Dec 2017 11:10 AM
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 97 புகார்கள் வந்துள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களும் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கேட்டபோது, அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த இரு நாட்களில் தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாநில தலைமை தேர்தல் அலுவலர் ஆகியோரிடம் கடந்த இரு நாட்களில் 91 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதில் 88 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 9 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுவரை ரூ.3 லட்சத்து 21 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 210 இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், சுவரொட்டிகள், கொடிகள் அகற்றப்பட்டுள்ளன. இதுவரை 9 புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரச்சாரத்துக்காக 62 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தேர்தல் அலுவலக அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT