Published : 09 Dec 2017 03:00 PM
Last Updated : 09 Dec 2017 03:00 PM
ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கே.வேலுச்சாமி மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக பிரவீன் பி.நாயர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சையாக டிடிவி தினகரனும் களம் காண்கின்றனர்.
இந்நிலையில், இத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மனு பின்னர் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரி செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்றால் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என திமுக புகார் மனு அளித்தது.
விஷால் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி கையாண்ட விதம் சர்ச்சைக்குள்ளாகிய நிலையில் திமுக புகாரின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல் அதிகாரி கே.வேலுச்சாமியை மாற்றி அவருக்குப் பதிலாக பிரவீன் நாயரை தேர்தல் அதிகாரியாக நியமித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT