Published : 01 Dec 2017 07:22 PM
Last Updated : 01 Dec 2017 07:22 PM
நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக வந்த ரவுடி உணவருந்தச் செல்லும்போது நட்ட நடுச்சாலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் இரண்டு பேர் தலைமறைவாக உள்ளனர்.
வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் விஜி என்ற விஜயகுமார்(28). காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் விஜி மீது இருந்தன.
2013-ம் ஆண்டு நடைபெற்ற குற்ற சம்பவத்திற்கான வழக்கு விசாரணைக்காக கடந்த வாரம் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வாரண்டுக்காக விஜயகுமார் நேரில் ஆஜரானார்.
வழக்கு விசாரணை மதியத்திற்கு மேல்தான் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டதால் நீதிமன்றம் அருகே உள்ள பவளக்காரன் தெருவில் மதிய உணவு சாப்பிட விஜி நடந்துசெல்லும் போது விஜியை சுற்றி வளைத்த கும்பல் சராமாரியாக வெட்டிவிட்டு ஓடியது. உயிருக்கு போராடிய விஜி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
தப்பி ஓடிய கொலையாளிகளை போலீஸார் தேடி வந்தனர். கொலையாளிகள் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த நிலையில் போலீஸார் கொலையாளிகள் 1.அப்துல் தமீம், 2.வெங்கடேஷ், 3.கணேஷ், 4.முனுசாமி, 5.மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேரை பிடித்துள்ளனர். மேலும் கொலையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான பில்லா சரவணன், அப்பு எடிசன் உள்ளிட்ட இரண்டு பேரை தேடி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். கொலையாளிகள் பிரபல ரவுடி ஈசாவின் ஆட்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்கள் பகுதியில் விஜி திடீரென மாமுல் வாங்க ஆரம்பித்தார். நாளுக்கு நாள் விஜியின் ஆதிக்கம் அதிகரித்ததால் இனி விஜி இருந்தால் மாமுல் சரிவர வராது என்ற கோபத்தில் கொலை செய்தோம் என்று தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT