Published : 21 Dec 2017 08:53 AM
Last Updated : 21 Dec 2017 08:53 AM
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசு கிளை அச்சகத்துக்கு புதிதாக வழங்கப்பட்ட நவீன அச்சு இயந்திரத்தை தமிழக முதல்வர் முன்னிலையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அரசு கிளை அச்சகம் இயங்கி வருகிறது. நீதிமன்றத்துக்கு தேவையான ஆவணங்கள், படிவங்கள் மற்றும் அன்றாட வழக்குப் பட்டியல்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.
அதிக பக்கங்களை அச்சிடும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய வெப்-ஆப்செட் இயந்திரத்தை ரூ.1.50 கோடி செலவில் அரசு வழங்கியுள்ளது. இந்த நவீன இயந்திரத்தை தமிழக முதல்வர் கே.பழனிசாமி முன்னிலையில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT