Published : 02 Dec 2017 10:13 AM
Last Updated : 02 Dec 2017 10:13 AM
மத்திய அரசின் குடிசைத் தொழில் நிறுவனம் சார்பில், கைவினை மற்றும் நெசவு கண்காட்சி சென்னையில் இன்று தொடங்குகிறது. வரும் 11-ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது.
மத்திய அரசு ஜவுளித் துறையின் கீழ், மத்திய குடிசைத் தொழில் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில், கைவினைக் கலைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் உருவாக்கும் கைவினைப் பொருட்கள், ஜவுளிகளை பிரபலப்படுத்தி அவர்களுக்கு நியாயமான விலை கிடைக்க வழிவகை செய்யும் வகையில் ஆண்டுதோறும் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான கண்காட்சி சென்னையில் இன்று (2-ம் தேதி) தொடங்குகிறது. ஆழ்வார்பேட்டை, டிடிகே சாலையில் உள்ள ஸ்ரீ சங்கரா அரங்கில் நடைபெறும் இக்கண்காட்சியை மத்திய ஜவுளி துறையின் தென்மண்டல வளர்ச்சி ஆணையர் (கைவினை) பி.மல்லிகார்ஜுனைய்யா தொடங்கி வைக்கிறார்.
இக்கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து 50-க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் பங்கேற்று தங்களின் படைப்புகளைக் காட்சிக்கு வைக்க உள்ளனர்.
மத்திய அரசின் குடிசைத் தொழில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT