Published : 23 Dec 2017 01:27 PM
Last Updated : 23 Dec 2017 01:27 PM

கண்கலங்கிய கனிமொழி.. அரவணைத்த ஸ்டாலின்.. நெகிழ்ந்த தொண்டர்கள்

2 ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி, ஆ.ராசா டெல்லியிலிருந்து இன்று (சனிக்கிழமை) சென்னை திரும்பினர்.

அவர்களுக்கு விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளித்தனர். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் நேரில் சென்று வாழ்த்தினர்.

அப்போது அங்கே அரங்கேறிய காட்சிகள் திமுக தொண்டர்களை நெகிழச் செய்தது.

"விமான நிலையத்தில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோரை மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இருவரது கைகளையும் கோர்த்து தன்னுடன் நிறுத்தி புகைப்படம் எடுக்கச்சொன்னார்.

அப்போது புகைப்படத்திற்கு நின்ற கனிமொழி கண்கலங்கினார். புகைப்படம் எடுத்து முடித்தப்பின் ஸ்டாலினை நோக்கி திரும்பிய கனிமொழி அவரை பாசத்துடன் ஆரத் தழுவி நன்றி தெரிவித்தார். அவர் முதுகில் ஆதரவாக ஸ்டாலின் தட்டினார்"

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x