Published : 20 Dec 2017 10:46 AM
Last Updated : 20 Dec 2017 10:46 AM
ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்ற ஆர்.கே.நகரில் மதுசூதனனுக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களுக்கு என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:
அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக திகழ்வது ஆர்.கே. நகராகும்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு எண்ணற்ற வளர்ச்சிப் பணிகளை ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார். அவற்றை, அதிமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த தொகுதியில் இன்னும் நிறைவேற்ற திட்டமிட்டிருந்த அனைத்துப் பணிகளையும் வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.
மூத்த அரசியல்வாதியான மதுசூதனன் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றும்போது, ஜெயலலிதா செய்ய நினைத்திருந்த பணிகளை விரைந்து நிறைவேற்ற உறுதுணையாக இருப்பார் என்று உறுதியளிக்கிறோம். எனவே, இரட்டை இலை சின்னத்தைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வாக்காளர்கள் அனைவரையும் பணிவோடு வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT