Published : 05 Nov 2017 10:51 AM
Last Updated : 05 Nov 2017 10:51 AM
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மதநல்லிணக்கம், நதிகள் இணைப்பு, மது ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு வலியுறுத்தி சென்னையில் இருந்து பாப்பாரப்பட்டிக்கு பாதயாத்திரை மேற்கொண்டார். அங்கு உண்ணாநோன்பும் மேற்கொண்டார். இதையடுத்து, போலீஸார் அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, சென்னையிலும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் கேட்டுக்கொண்டதால், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இந்நிலையில், குமரி அனந்தனின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்திக்குறிப்பு தெரி விக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT